2002ம் ஆண்டு போதையில் காரை ஓட்டி ஒருவரை கொலை செய்ததாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மும்பை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில், சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏதும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என கூறி சல்மான் கானை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஏற்கனவே மும்பை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்தது.