சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன வேதனையில் உள்ளார். ஏனெனில் அவரின் நடிப்பில் வெளியாக இருந்த ரஜினி முருகன் படம் பல மாதங்களாக வெளியாகாமல் தள்ளிப்போகின்றது.
இந்நிலையில் இப்படத்தை பெப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் அத்தனை நாட்கள் வேண்டாம், உடனே வெளியாக வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். இதனால், இப்படம் இந்த மாதத்திற்குள் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை படம் சொன்ன திகதியில் வெளிவரும் எனவும் படக்குழுவினர் கூறியுள்ளார்களாம்.