‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 20 கிலோ அதிகரித்தார். திரை உலகில் இது பெரிதாக பேசப்பட்டது.
‘ருத்ரமாதேவி’ படத்துக்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதையும் அனுஷ்காக பெரிய விஷயமாக சொல்லி வந்தார். அடுத்து நடிப்பதால் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதை சாதாரணமானது தான். ஆனால் அதற்காக எனது உடல் எடையை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் மிகவும் அதிகம்.
இதற்காக அதிகமாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது இருந்தது. கஷ்டப்பட்டு எடையை 20 கிலோ அதிகமாக்கினேன். இப்போது மீண்டும் உடல் எடையை குறைக்க என்னை வருத்திக்கொள்கிறேன். முன்பு தினமும் ஒருமுறை உடற்பயிற்சி, யோக செய்து வந்தேன். இப்போது இரண்டு முறை உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறேன். நான் படும் சிரமத்துக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை 15 கிலோ எடையை குறைத்து விட்டேன். மீதம் உள்ள 5 கிலோவையும் இன்னும் ஒரு மாதத்திற்குள் குறைத்து விடுவேன்.
இந்த மாத இறுதியில் ‘பாகுபலி–2’ படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குள், அதிகமான எடை முழுவதையும் குறைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஹீரோக்கள் கதையில் சேர்த்து நடிப்பது எளிது. அது பற்றி நான் பெரிதாக கவலைப்படுவது இல்லை. ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி எடுக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பேன். அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன். எதிர்பார்த்தது நடக்காவிட்டால் வேதனைப்படுவேன் என்றார்.