தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மருதநாயகம். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து, பட்ஜெட் காரணமாக நின்றது.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட்ரை ஐங்கரன் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.
இதன் மூலம் ஐங்கரன் நிறுவனமே இப்படத்தின் மீதமிருக்கும் பகுதியை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. மேலும், லண்டனில் உள்ள நண்பர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.