கடந்து போக இருக்கும் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2 வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷாருக்கான் 6 வது இடத்திலும், அப்துல் கலாம் 3 வது இடத்தையும், பிரதமர் நரேந்திர மோடி 10 வது இடத்தையும் பிடித்து உள்ளனர். சானியா மிர்சா 7 வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளனர்.
நான்கும், ஐந்தும்:
4 ஆவது இடத்தில் காத்ரீனா கைபும், 5 ஆவது இடத்தில் தீபிகா படுகோனேவும் உள்ளனர்.
மற்ற இடங்கள்:
7 ஆவது இடத்தில் யோ யோ ஹனி சிங்கும், 8 வது இடத்தில் காஜல் அகர்வாலும், 9 வது இடத்தில் அலியா பட்டும் உள்ளனர்.
3 வருடங்களாக:
2014 ஆம் ஆண்டிற்கான தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார். தனக்கு அளிக்கபட்ட இந்த கவுரவத்திற்கு சன்னி லியோன் நன்றி கூறி உள்ளார்.
எல்லோருக்கும் நன்றி:
“ஓ மை காட் உங்களுக்கு மிகவும் நன்றி! நான் எல்லோரையும் நேசிகிறேன்! நான் மீண்டும் கூகுள் தேடலில் முதலிடம் பெற்றதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லோருக்கும் எனது இரவு வணக்கங்கள் ” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.