‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துடன் நடித்தவர் பார்வதி நாயர். அடுத்து கமலின் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்தார். இப்போது ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் நட்ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இது தவிர கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பார்வதிநாயர் சிறப்பாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர்.
அஜீத்தின் தீவிர ரசிகையான பார்வதி நாயர், இதை ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த போது அஜீத்திடம் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜீத் படப்பிடிப்பின்போது அவரை அழகாக புகைப்படம் எடுத்தார். அதை பிரேம் போட்டு தனது அன்பளிப்பாக பார்வதி நாயரிடம் வழங்கினார். இதனால் உள்ளம் நெகிழ்ந்த பார்வதி நாயர் அஜித்தை ஓவியமாக வரைந்து அவருக்கு கொடுக்க முடிவு செய்தார்.
தற்போது அஜீத் ஓவியத்தை பிரமாண்டமாக வரைந்து வருகிறார். வித்தியாசமான கோணத்தில் ஆஜித் படத்தை அவர் வரைந்து வருவதாக பார்வதி நாயரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஓவியம் நிறைவு பெறும் கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில் அஜீத்தை சந்தித்து ஓவியத்தை கொடுக்க பார்வதி நாயர் திட்டமிட்டுள்ளார்.