சூர்யாவிற்கு புத்தாண்டு ஆரம்பமே மகிழ்ச்சிகரமாக தொடங்கியுள்ளது. பசங்க-2 வெற்றி சந்தோஷத்தில் இருக்கும் சூர்யா இந்த புத்தாண்டில் புது சபதம் எடுத்துள்ளார்.
இதில் ’24 மணி நேரமும் சினிமா சினிமா என்று ஓடுகிறேன், கடந்த இரண்டு வருடமாக அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் யாருடனும் இருக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.
இந்த வருடம் கண்டிப்பாக சினிமாவையும் தாண்டி குடும்பத்தையும் கவனிக்க வேண்டும், மேலும் பசங்க-2 குடும்பத்தினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதுப்போன்ற படங்களை தொடர்ந்து எங்கள் நிறுவனம் கொடுக்கும்’ என சூர்யா கூறியுள்ளார்.