திருடப்போன இடத்தில் செல்ஃபீ எடுத்து சந்தேக நபர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்ற வாரத்தில் காரொன்றையும் நான்கு பேரிடம் இருந்து பொருட்களையும் திருடியதாக 18 வயது அல்மான்ஸா மார்ட்டினெஸ் மற்றும் வேறு இரண்டு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தான் திருடிய காரை ஒட்டிச் செல்வதற்கு முன்பாக, திருடு கொடுத்த பெண் ஒருவருடன் அல்மான்ஸா தகவல் பரிமாறிக்கொண்டதுடன், அவருடன் சேர்ந்து செல்ஃபீ புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
அவர் எடுத்த செல்ஃபீயை வைத்து, அல்மன்ஸாவை தேடிக் கண்டுபிடித்ததோடு, ஆயுதங்களைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்தது, ஆளைக் கடத்தியது போன்ற குற்றஞ்சாட்டுகளை பொலிசார் அவர் மீது சுமத்தியுள்ளனர்.