சிம்புவின் ஆபாச பாடலுக்கு இசை அமைத்ததாக எழுந்த புகார் காரணமாக இசை அமைப்பாளர் அனிருத் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார். சிம்பு பாடல் காரணமாக அனிருத்துக்கும் பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதற்கு பரிகாரம் தேடும் வகையில் பெண்களைப் பற்றி உயர்வாக சொல்லும் காதல் பாடல் ஒன்றை அனிருத் வெளியிட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் என் நண்பர்களும் ரசிகர்களும் காதலர் தினத்தில் என்னிடம் இருந்து அருமையான பாடல் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பாடல் பரிகாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.