பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் வழங்கப்படும் பீப்புள்ஸ் சாய்ஸ் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு நடிகை இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
‘குவாண்டிகோ’ தொடரில் எஃப் பி ஐ ஏஜென்டாக நடித்ததற்காக அவர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
எம்மா ராபர்ட்ஸ், ஜாமி லீ கர்டிஸ், லீ மிச்செல், மார்சியா கே ஹார்டன் ஆகிய நடிகைகளும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
அந்த விருதுடன் தான் நிற்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாப் நட்சத்திரமான டைலர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பீபர், ஜிம் பார்சோன்ஸ் ஆகியோருக்கும் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
#PeoplesChoiceAwards என்ற ட்விட்டர் ஹாஷ்டாக் இந்தியாவில் பிரபலமல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், பிரியங்கா சோப்ராவின் வெற்றியையடுத்து அந்த ஹாஷ்டாக் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆகத் துவங்கியுள்ளது.