விக்ரம் நடிப்பில் கடைசியாக வந்த 10 எண்றதுக்குள்ள பெரும் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இவர் ஆனந்த் ஷங்கர், திரு இயக்கத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அடுத்து பாலிவுட் இயக்குனர் ஓம் ராவுத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
இப்படம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகின்றது. ரூ 100 கோடிகளுக்கு மேல் இப்படத்தின் பட்ஜெட் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.