ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்ததில் அளவிட முடியாத மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் நடிகர் சூரி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்மீது நான் கொண்டிருந்த நேசம் அளவிட முடியாதது.
இந்த வருடமும் அந்த வீர விளையாட்டு நடக்காதோ என்று பயந்தவர்களில் நானும் ஒருவன்.
எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு.
மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி மாடுகள் தனி எனப் பிரிக்க முடியாது. இத்தகைய அன்புக்கும் வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக் கட்டு நிகழ்வு இந்தவருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.