லிங்கா படம் வெளியாகி எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தது என்று நாம் அனைவரும் அறிவோம். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், படம் படுதோல்வி என்று சிலர் கூறிவருகின்றனர்.
அண்மையில் இதுகுறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், லிங்கா படம் ரூ. 158 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. எந்திரன் படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் அதிகம் வசூலித்துள்ளது.
அதனால் கண்டிப்பாக லிங்கா படம் ஹிட் தான் என்று கூறியுள்ளார்.
தற்போது கே.எஸ். ரவிக்குமார், சுதீப், நித்யா மேனன் நடிப்பில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தை தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறார்.