புத்தாண்டு பிறப்பு அனைத்து துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து இருக்கின்றது என்றும் கூறலாம். அதுவும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு பணிகளுக்கு அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அந்த வகையில் இந்தாண்டு எந்தெந்த பணிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஹெட்
பல்வேறு நிறுவனங்களும் ஆன்லைனில் கால்பதிக்க திட்டமிட்டு வரும் சூழலில், இண்டர்நெட் துறையில் அதிகம் சம்பாதிக்க முடியும். இதற்கேற்ப இண்டர்நெட் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருப்பதோடு இந்தியாவில் இத்துறையில் ஆண்டிற்கு ரூ. 30 முதல் 60 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.
ப்ராடக்ட் டெவலப்பர்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் இன்றைய இளைஞர்களை குறிவைக்கும் பொருட்கள் சார்ந்த மொபைல் செயலிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக துவக்கத்தில் ஆண்டிற்கு ரூ.15 லட்சம் முதல் உயர் பதிவிகளுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் பெற முடியும்.
மூத்த மேலாளர்
இணைய வர்த்தக நிறுவனங்களில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு அதிக பணியாளர்கள் தேவைப்படுகின்றது. இதோடு மூத்த மேலாளர் பணியில் ரூ.1 முதல் 10 கோடி வரை சம்பாதிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
டேட்டா அனாலடிக்ஸ்
தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டு வரும் நிலையில் டேட்டா அனாலிஸ்ட் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் தேவை ஏற்ப்பட்டுள்ளது. இத்துறையில் ஆண்டிற்கு ரூ.2 முதல் 10 லட்சம் வரையிலும் மூத்த பணிகளுக்கு ரூ.70 முதல் 1 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகின்றது.
மொபைல் ப்ராடக்ட்
டெவலப்மென்ட் மொபைல் போன் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்பிரிவில் ப்ராடக்ட் டெவலப்மென்ட் பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதோடு இத்துறையில் துவக்கத்தில் ரூ.12 முதல் 18 லட்சம் முதல் சம்பாதிக்க முடியும்.