குஷி, காக்க காக்க, மொழி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேல் நம்பர் 1 நடிகையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.
பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் தற்போது திரையில் வெற்றி நடைப்போடும் பசங்க-2 படத்தில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா தானாம். அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஆனால், எல்லோரும் அந்த கதாபாத்திரத்தை புகழ, ‘அந்த வாய்ப்பை ஏன் மறுத்தோம்’ என எண்ணி வருத்தப்படுகிறாராம்.