தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த கூட்டணி சூர்யா-கௌதம் மேனன். இவர்கள் ஒரு சில பிரச்சனைகளால் பிரிந்தனர்.
இதன் பிறகு இவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யா சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் இவரிடம் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைவீர்களா என்று கேட்க ‘அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் நாங்களே அறிவிப்போம்’ என கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.