தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரையோரம் 50 ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும்.
இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆழந்தலை கடற்கரை பகுதியில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 50 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.
திமிங்கிலங்கள் இறப்பு:
இந்நிலையில் தூத்துக்குடி மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 சிறிய வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. ஆலந்தழை, கல்லாமொழி அருகே 100க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய சிறிய வகை திமிங்கிலங்கள் தொடர்ந்து உயிரிழப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திமிங்கிலங்கள் உயிரிழப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.