உத்தரபிரதேச மாநிலம் நெக்தாவூரைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். இவருக்கும் சங்கீதா என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
முதலில் சந்தீப் ஜெயினும் சங்கீதாவும் தனி குடித்தனம் இருந்தனர். பிறகு அவர்களுடன் சந்தீப் ஜெயினின் 70 வயது தாயார் ராஜ் ராணியும் சேர்ந்து வசித்து வந்தார். நாளடைவில் மாமியார் ராஜ்ராணி மீது சங்கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மாமியாரை அவர் எப்போதும் திட்டியபடியே இருந்தார்.
மாமியார் மீது சங்கீதாவுக்கு ஒருநாள் உச்சக்கட்ட கோபம் ஏற்பட்டது. 70 வயது முதியவர் என்ற இரக்கம் இல்லாமல் அவர் மாமியாரை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார்.
படுக்கையில் இருக்கும் மாமியார் ராஜ்ராணியை அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யும் வகையிலும், தலையில் அடித்தும் துன்புறுத்தினார். அப்படியும் ஆத்திரம் தீராமல் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே இழுத்துப் போட்டார்.
சங்கீதாவின் இந்த வெறித்தனமான தாக்குதல்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு காமிரா மூலம் வீடியோவில் பதிவானது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சிகள் இணையத் தளங்களிலும் வாட்ஸ்அப்–களிலும் பரவியது.
70 வயது மாமியார் அமைதியாக கட்டிலில் அமர்ந்திருக்க, மருமகள் சங்கீதா அவரை அடித்து துவைத்த காட்சிகளை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஸ்ரீவஸ்தவா என்ற சமூக ஆர்வலர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் சங்கீதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்று காலை சங்கீதா கைது செய்யப்பட்டார்.
சங்கீதா சமீபத்தில் தன் கணவரிடமும் சண்டை போட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார். அவரை விவாகரத்து செய்ய சந்தீப் ஜெயின் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து சந்தீப் ஜெயின் கூறுகையில், “அவள்(மனைவி) எப்பொழுதுமே இப்படிதான். என்னை, என்னுடைய பெற்றோர்களையும் அடிக்கடி தாக்குவார். அவளுடைய இந்த நடத்தையை வெளிக்கொணர நீண்ட வருடமாக நான் காத்திருந்து பின்னர் சிசிடிவி கேமரா மூலம் தற்போது படம் பிடித்துள்ளேன்.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்த போது, தன்னுடைய மனைவி மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர்” என்று கூறினார்.