தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-1-2016, 19-1-2016 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது, 5-வது காட்சி நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களான 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகள் ஏற்கனவே உள்ள அரசு உத்தரவுப்படி அன்றைய தேதிகளிலும் அதிகப்படியாக ஒரு காட்சி (5-வது காட்சி) காலை 9 மணிக்கு நடத்திக்கொள்ளலாம். அதுபோல், நடமாடும் திரையரங்குகள் 15-1-2016, 16-1-2016, 17-1-2016 ஆகிய தேதிகளில் காலை காட்சிகள் 9 மணிக்கும், 18-1-2016, 19-1-2016, 20-1-2016, 21-1-2016 ஆகிய தேதிகளில் மேட்னி காட்சியாக மதியம் 2.30 மணிக்கு நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.