பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் “வறுமை” அவரை விட்டு நீங்கவில்லை.
மார்க்கெட்டில் வெள்ளரி வியாபாரம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அதுவும் முடங்கிப்போக, ரேஷன் அரிசிதான் தங்கராசுவின் குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறது.