பிரிட்டனில் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பலி இல்லாத தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்த நோய்க்கு யாரும் பலியாகவில்லை. அந்த நாட்டில் கொரோனா தீவிரமடையத் தொடங்கிய கடந்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகு, முதல்முறையாக அன்றுதான் கொரோனா பலி பதிவு செய்யப்படவில்லை.
பிரிட்டனில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், நோய்ப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தினசரி உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்து வருவதாகக் கருதும் ஒரு தரப்பினா், கொரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனா். பிரிட்டன் அரசும் கட்டுப்பாடுகளை நீக்க இந்த மாதம் 21 ஆம் திகதியை இலக்காக நிா்ணயித்துள்ளது.
எனினும், நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் அளவுக்கு தடுப்பூசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதில் கவனம் தேவை என்று அரசை ஒரு தரப்பினா் எச்சரித்துள்ளனா்.
பிரிட்டனில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகமாக இருப்பதாகவும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதன்கிழமை மட்டும் 4,330 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் 12 கொரோனா பலி பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 44,94,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 127,794 போ் உயிரிழந்துள்ளனா்.