இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,484 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை எனவும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 02 ஆண்களும் 01 பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.