பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்துள்ள சம்பவமொன்று கலஹா – லுல்கந்துர பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. சுமார் 30 அடி உயரமான மரமொன்றில் இருந்து வீழ்ந்த வேளையில் பரசூட் ருலிமங்கொட பகுதியில் தரையிறக்கப்பட்ட போது சுமார் 30 அடி உயரமான மரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 35 வயதான ரஷ்ய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது. கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website