திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிக்குக்குட்பட்ட பகுதியில் இளம் தாயொருவருக்கு பாம்பு தீண்டியதில் கந்தளாய் தள வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவருக்கே பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினை துப்பரவு பணிகளை செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
என்ன பாம்பு தீண்டியது என்பது சரியாக தெரியாது எனவும் கால்கள் வீங்கிய நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.