கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி பரிதாபமாக பலியாகியுள்ளார். கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற போது குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website