தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவிக்கு நடந்த அநீதிக்கான உடனடித் தீர்வினை வழங்க வேண்டும். அதேவேளை மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதை கிழக்கு பல்கலைகழக கலாசார பீட மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பல்கலைகழக கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் என்.ஜெயராஜ், செயலாளர் ஜீ.மதுஷாந்த் ஆகியோர் கையொழுத்திட்டு இன்று (19) கண்டன ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர்.