ஓமானில் இன்று ஆரம்பமாகும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித்தொடர் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போட்டியில் பல முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளதால் போட்டித்தொடரை பலரும் எதிர்பார்த்துள்ளனர். எனினும், போட்டி ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் புதிய செய்தி ஒன்று வௌியாகி உள்ளது. இலங்கையின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார காரணங்களால் அவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும், பின்னர் போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான லெஜெண்ட்ஸ் லீக் போட்டியின் முதல் போட்டி ஓமானில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. லெஜண்ட்ஸ் லீக் போட்டித்தொடர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் கீழே.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website