மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.
இதுவரை அதன் தலைவராக இருந்த லசந்த விக்ரமசிங்க, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நேற்று (19) பல ஊடகங்கள்செய்தி வெளியிட்டிருந்தன.
இதன்படி, நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய லசந்த விக்ரமசிங்க, புதிய தலைவர் நியமனம் தொடர்பில் தனக்கும் ஊடகங்கள் ஊடாகவே தெரியவந்ததாக குறிப்பிட்டார்.