வெலிகம பிரதேசத்தில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.
கடந்த 20 ஆம் திகதி மிதிகமவில் உள்ள துர்கிய கிராமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மிதிகம மற்றும் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.