திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுண்ட்வேணன் தோட்டத்தில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டகலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கருப்பையா கார்த்திகேயான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மவுண்ட்வேணன் தோட்ட கொழுந்து மடுவத்தில் கொழுந்து மூடைகளை ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோறி திடீரென சென்ற நிலையில் சாரதி லொறியை நிறுத்த முற்பட்ட போது அது பயனளிக்காத நிலையில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது .
இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் காயமடைந்து சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-