ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லி கிராம் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.