பெரு நாட்டில் உள்ள ட்ருஜில்லோ எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்தப்பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஒரு தம்பதி தங்களது இரண்டு வயது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த கார் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ரோட்டில் 16 அடி அகலத்திற்கு பெரிய பள்ளம் விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த தம்பதியினர் சுதாரிப்பதற்குள் காரின் பின்பக்கம் பள்ளத்தில் மாட்டிக்கொண்டது.
அதன்பின் மலைப்பாம்பு இரையை விழுங்குவதுபோல் அந்த பள்ளம் மெதுமெதுவாக காரை உள்வாங்கிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் சாலைக்கடியில் ஓடும் கழிவு நீர் காரை நிரப்பத் தொடங்கியது. கார் பள்ளத்தில் விழுந்ததும் அருகில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தி அந்த காரை மேலும் பள்ளத்தில் இறங்க விடாமல் பிடித்துக்கொண்டனர். உடனே, அருகில் உள்ள இரும்பு கம்பிகளை கொண்டு காரை கட்டி ஒரு வழியாக அந்த தம்பதிகயரை மீட்டார்கள்.
சக வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் செய்த உதவியால் மூன்று பேரும் உயிர் தப்பினர்.