கடல்வாழ் உயிரினங்களை நேசிப்பவர்களுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாபெரும் கண்காட்சியகத்துடன் கூடிய தங்கும் விடுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு முப்பது லட்சம் லிட்டர் தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குளத்தில் பயங்கரமான மீனினங்களாக கருதப்படும் ராட்சத சுறா உள்ளிட்ட சுமார் 35 வகை கடல்வாழ் உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
நாற்புறமும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை குளத்தின் அடிப்பகுதியில் பார்வையாளர்களுக்கான தங்கும் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. அறையின் மேற்புறக்கூரையானது, குளத்தின் அடிப்பகுதியையும், நாற்புற சுவர்கள் குளத்தின் நாற்புற கண்ணாடி தடுப்புகளையும் கொண்டுள்ளன.
இந்த அறையில் தங்குபவர்களுக்கு ஒரு சிறப்புப் போட்டியை இந்த கண்காட்சியகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 11, 12, 13 தேதிகளில் மட்டும் இங்கு தங்கி, இரவில் தூங்கி, ராட்சத சுறாக்களுடன் பழகும் அரியவாய்ப்பை பெறும் அதிஷ்டசாலிகளுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாட்களுக்கு பின்னர் இந்த கண்காட்சியகம், வெறும் காட்சிக்கூடமாகவும், ஆய்வுக்கூடமாகவும் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.