செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.
அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அங்கு கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவனபகுதிகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க நிபுணர் ஜானிஷ் பிஷப் ஆய்வில் தெரிவித்துள்ளார்.