விலங்கு பூங்காவில் வளர்க்கப்படும், உலகிலேயே அதிக வயதுடைய பாண்டாவாக கருதப்படுகின்ற ஜியா ஜியா, ஹாங்காங் கேளிக்கை பூங்காவில் இறந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் உடல்நலம் மிகவும் மோசமான பெண் பாண்டாவான ஜியா ஜியா, பசி எடுக்கும் உணர்வை இழந்திருந்தது.
ஹாங்காங் ஓஷன் பூங்காவில் இருந்த ஜியா ஜியாவின் 37-வது பிறந்த நாள் கடந்த ஜூலை மாதம் தான் விமரிசையாக கொண்டாடப்பட்டது.