நடிகர் – பாஸ்கர் சீனுவாசன்
நடிகை – தானா நாயுடு
இயக்குனர் – பாஸ்கர் சீனுவாசன்
இசை – ஸ்ரவன்
ஓளிப்பதிவு – பரணி செல்வம்
கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.
குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே தேதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.
கதாநாயகிக்கும் வில்லனுக்கும் தான் படத்தில் முக்கியத்துவம். அதை உணர்ந்து நாயகி தானா நாயுடுவும் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர்.
கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது.
நல்ல கதைக்களத்தை கையில் எடுத்த பாஸ்கர் சீனுவாசன் இன்னும் வலுவான திரைக்கதையை அமைத்து இருக்கலாம். அதிக லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். வழக்கமான பேய் படங்கள் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கைலா’ திகில் குறைவு.