அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ்.
அவரது மறைவுக்குப் பிறகு அதிபரானார் நிக்கோலஸ் மதுரோ. அவர் அதிபர் பொறுப்பை ஏற்றபின் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன.
அனைத்தையும் சமாளித்து அதிபராக தொடரும் மதுரோ பெண்கள் சுகாதார திட்டத்தை ஊக்குவிப்பதற்காகத் தொலைக்காட்சியில் தோன்றினார்.
அப்போது நாட்டின் நலனுக்காக வெனிசுவேலாவின் ஒவ்வொரு பெண்களும் ஆறு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
அந்நாட்டின் குழந்தைகளில் 13 சதவீதம் பேர் 2013 – 2018 ஆகிய காலகட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்ததாகக் கூறுகிறது ஐ.நா. மதுரோவின் இந்த கூற்றை எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி உள்ளனர்.
நாட்டின் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிக்கும் போது உளவியல் சிக்கல் உள்ளவர்களால்தான் இப்படி கூற முடியும் என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.