இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ட்விட்டரில் India Fights Corona என்ற பக்கத்தைத் தொடங்கி கொரோனா குறித்த விவரங்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகளை பதிவிட்டு வருகிறது.
இதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் கூறிய 7 முக்கிய வழிகளை பதிவிடப்பட்டுள்ளது.
• கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.
• கண், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
• இருமும்போது முழங்கையின் உள்புறம் அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
• கூட்டமான இடங்களுக்கு செல்வதையும் கூட்டமான இடங்களில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
• உடல் நலம் சரியில்லாமல் இருந்தால், அதாவது லேசான இருமல் மற்றும் காய்ச்சல் வந்தால் கூட வீட்டிலேயே இருக்க வேண்டும்
• காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் முதலில் உதவி எண்களுக்கு அழைத்து சொல்ல வேண்டும்.
• கோவிட்-19 தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கொடுக்கும் சமீபத்திய தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த 7 வழிமுறைகளில் முன்பே கூறப்பட்டிருந்தாலும் இது முக்கிய விழிப்புணர்வு செய்தியாக மீண்டும் பதிவிடப்பட்டிருந்தது.