கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் இழப்பு கடந்த ஆண்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது, முந்தைய உச்சத்தைவிட 15 சதவீதம் அதிகரித்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பனி உருகுவதில் 1948ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் `வரலாறு காணாத அளவுக்கு´ அங்கு உருகி இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த கோடையின் போது, கிரீன்லாந்து பகுதியில் தடைபட்டு நின்ற உயர் அழுத்த மண்டலங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஆனால் கார்பன் வாயு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, கிரீன்லாந்து பகுதி அதிகம் பனி உருகும் பகுதியாக மாறி வருகிறது என்று கட்டுரையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் கிரீன்லாந்தில் அதிக அளவில் பனி உருகியதால் உலக அளவில் கடல்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.