பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையை இந்திய புலனாய்வுத்துறை விசாரித்து வரும் நிலையில், அவருடன் கொண்டிருந்த உறவு, அவரது பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகையும் சுஷாந்தின் முன்னாள் தோழியுமான ரியா சக்ரபர்த்தி.