நடிகர் – நடிகர் இல்லை
நடிகை – காயத்ரி
இயக்குனர் – ஆர். சம்பத்
இசை – ஆர்.ஜி. ஆனந்த்
ஓளிப்பதிவு – மகிபாலன்
7 பேர் நட்புடன் ஜாலியாக பழகி வருகின்றனர். அவரிகளில் ஒரு பெண் புதிதாக ஒரு வீட்டுக்கு குடிபெயர்கிறார். உதவிக்காக ஒரு தோழியையும் அழைத்து செல்கிறார். புதிதாக செல்லும் வீட்டில் ஒரு மந்திர பலகை இருக்கிறது. அதனை எடுப்பவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் தான் எந்தவிதமான வில்லங்கத்திலும் சிக்காமல் இருப்பர்.
அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாத அந்த பெண், விளையாட்டுத்தனமாக அந்தப் பலகையை திறந்ததால் இறந்துவிடுகிறார். இந்தப்பலகையை பற்றி அறிந்த மற்றோரு பெண் ஒருவர் தனது தோழிகளுடன் சேர்ந்து அந்த பலகையை திறக்கின்றார்.
அதில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றும் அவர்கள் இறுதியில் பலகையை மூடும் போது மந்திரத்தை சொல்லாமல் மூடி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன ஆனது? அந்த மாய பலகையின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பது அவர்களது நடிப்பிலேயே தெரிகிறது. பேய் படம் என சொல்கிறார்கள் ஆனால் ஒரு இடத்தில் கூட பயம் வராதது படத்தின் மைனஸ்.
திகில் படத்தை கொடுக்க முயன்றுள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை சுத்தமாக எடுபடவில்லை. மகிபாலனின் ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் படம் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
மொத்தத்தில் ‘மந்திர பலகை’ பயமில்லை.