ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
டுபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ஓட்டங்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பல விருதுகளை சிஎஸ்கே அணி வென்றுள்ளது.
சாம்பியன் : சென்னை சூப்பர் கிங்ஸ்
இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் : டு பிளெஸ்சிஸ் (சிஎஸ்கே)
மதிப்புமிக்க வீரர் (போட்டி நாயகன்) : ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
ஃபேர்பிளே விருது : ராஜஸ்தான்
வளரும் வீரர் : ருதுராஜ் (சிஎஸ்கே)
அதிக சிக்ஸர்கள் : கே.எல். ராகுல் (பஞ்சாப்)
சூப்பர் ஸ்டிரைக்கர் : ஹெட்மையர் (தில்லி)
பவர்பிளேயர் : வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா)
சிறந்த கேட்ச் : பிஸ்னோய் (பஞ்சாப்)
கேம் சேஞ்சர் : ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
அதிக ரன்கள் : ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)
அதிக விக்கெட்டுகள் : ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)