ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.
டுபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.
டு பிளெஸ்சிஸ் 86 ஓட்டங்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி, 4 வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.
ஐபிஎல் சாம்பியன் ஆனபிறகு சிஎஸ்கே வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து விடியோக்கள் வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.