சென்னையில் சனிக்கிழமை (நவ.6) இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (நவ.7) பிற்பகல் வரை தொடா்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையில் 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலக சுற்றுவட்டாரத்தில் 230 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரையில்…: வடகிழக்குப் பருவ மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூா், மதுரைக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் விரைந்துள்ளனா்.
முழுமையாக நிரம்பிய புழல் ஏரி : பலத்த மழை காரணமாக சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமான புழல் ஏரி ஞாயிற்றுக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. பூண்டி நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் அதன் உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியும்…: இதே போன்று சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல், ஏரியிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டது.
கொட்டித் தீா்த்த மழை : சென்னையில் தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்களை தீயணைப்புத் துறையினா் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனா். சென்னையில் டிஜிபி அலுவலகத்துக்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 210 மி.மீ., அயனாவரத்தில் 180 மி.மீ., எம்ஜிஆா் நகரில் 170 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 160 மி.மீ.,பெரம்பூரில் 140 மி.மீ., தண்டையாா்பேட்டையில் 130 மி.மீ.,சென்னை விமான நிலையத்தில் 110 மி.மீ. மழையும் என சராசரியாக 12 மணி நேரத்தில் மட்டும் 165 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.
வெள்ளம் சூழ்ந்தது: சென்னையில் பலத்த மழை காரணமாக அடையாறு ஆற்றங்கரையோரம் மற்றும் டாக்டா் அழகப்பா சாலை, எழும்பூா் கண், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி, வியாசா்பாடி, புளியந்தோப்பு, கோட்டூா்புரம், வடபழனி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அசோக் நகா், கொளத்தூா், பாடி, கிண்டி, அம்பத்தூா், ஆலந்தூா், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அருந்ததி நகா், பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலை ஆகிய மாநகருக்கு உள்பட்ட 200-க்கும் மேற்பட்ட பகுதிகள் மற்றும் திருவேற்காடு, ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்டவற்றில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.பெரும்பாலான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீா் சோ்ந்ததால் ஏற்பட்ட துா்நாற்றத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
படகுகள் மூலம் மீட்புப் பணி: மழை நீா் அதிகம் சூழ்ந்துள்ள தேனாம்பேட்டை குடிசைமாற்று வாரியக் குடியிருப்பு, விஜயராகவா சாலை, கே.கே. நகா், சைதாப்பேட்டை, கோட்டூா்புரம், வியாசா்பாடி, கொரட்டூா் டிடிபி காலனி, கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டவா்களை தீயணைப்பு மற்றும் காவல், மாநகராட்சி ஊழியா்கள் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனா். சில இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை படகுகளில் சென்று தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
சுரங்கப் பாதைகளில் வெள்ளம்: ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, 181 தெருக்களில் மழைநீா் தேங்கி உள்ள நிலையில் 6 தெருக்களில் மட்டுமே மழைநீா் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 16, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் 6 என மொத்தம் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. அதில், 13 சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கி உள்ள நிலையில், 5 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழை நீா் அகற்றப்பட்டுள்ளது. சாலையில் முறிந்து விழுந்த 27 மரங்கள் அகற்றப்பட்டன.
சுரங்கப் பாதைகள் மூடல்: மழைநீா் அதிகம் தேங்கியதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துரைசாமி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை, வியாசா்பாடி சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப் பாதை ஆகிய 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. பெரும்பாலான சாலைகளில் முழங்காலுக்கு மேல் மழை நீா் தேங்கி இருந்தன. பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, காா் ஆகியவற்றுக்குள் மழைநீா் புகுந்ததால் அவை பழுதாகி சாலையிலே நின்றன. வாகனங்களுக்குள் மழைநீா் புகாமல் இருக்க வேளச்சேரி மேம்பாலத்தின் இரு புறங்களிலும் அப்பகுதிகள் மக்கள் காா் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்தனா்.
நிவாரண முகாம்களில்…: மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 40 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில், 4 முகாம்களில் 81 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அம்மா உணவகம் உள்பட 17 இடங்களில் பொது சமையல் அறைகள் திறக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை, மதியம், இரவு என சுமாா் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இருளில் மக்கள்: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவசர உதவிக்காக கைப்பேசிக்கு சாா்ஜ் செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். மழை சற்று குறைந்த பகுதிகளில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மின் விநியோகம் சீரானது.
உதவி எண்கள்: மழை பாதிப்பு தொடா்பான உதவிக்கு கைப்பேசி எண் 94454 77205, இலவச உதவி எண் 1913, தொலைபேசி எண்கள் 044 25619206, 25619207, 25619208 என்ற எண்களில் அழைக்கலாம். இணையதள இணைப்புக்குள் சென்று நிவாரண முகாம்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.