பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக், அமீர், சஞ்சீவ் என 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.
அவர்களால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை, எந்த ஒரு பரபரப்பும் இல்லை.
இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் ராஜு மற்றும் பாவனி இடையே சின்ன சண்டை நடக்கிறது, மற்ற போட்டியாளர்களும் இதுகுறித்து பேசுகிறார்கள்.
கடைசியில் இந்த டீமில் இருந்து நான் வெளியேறுகிறேன், எனக்கு இங்கே பிடிக்கவில்லை என பாவனி கூறுகிறார்.
அடுத்து என்ன நடந்தது, இவர்களது சண்டை முடிந்ததா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.