இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம், லுமாஜாங்கிலுள்ள செமெரு எரிமலை திடீரென சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் 14 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
எரிமலையிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பால் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் சாம்பலில் மூழ்கின. சூடான எரிமலைக் குழம்பு 11 கி.மீ. வரை சனிக்கிழமை 2 முறையும் 2 கி.மீ. வரை ஞாயிற்றுக்கிழமை 2 முறையும் வழிந்தோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எரிமலை சீற்றம் தணிந்தது போல் தோன்றியதால் அருகிலுள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்ப சிலா் முயன்றனா். எனினும், அவ்வாறு உடனடியாக திரும்ப வேண்டாம் என்று பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்தனா்.