சென்னையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி, நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது ஏற்க மறுத்து இழிவுபடுத்தி தவறாக பேசியதாகவும், அவரின் மேல் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் விமானநிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் எட்டி உதைப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.
இதனிடையே விமானத்தில் நடிகர் மகாகாந்திக்கும், விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வாக்குவாதத்தின்போது மகாகாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.