கூட்டு குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
4 அண்ணன்-தம்பிகள் அவர்களை சுற்றியே கதை நல்ல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
கண்ணன் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் இப்போது வீட்டைவிட்டு வெளியே வாழ்ந்து வருகிறார்.
மீனாவின் கடையில் வேலை செய்தபோது அவரது அப்பா பணம் திருடிவிட்டான் என கண்ணனை வெளியே அனுப்பிவிட்டார்.
கடையில் வேலை செய்பவனே அந்த பணத்தை எடுத்துவிட்டான் என்ற உண்மை அறிந்த கதிர் அந்த பையனை அடித்துவிடுகிறார்.
இதனால் கோபமான அவர் சில அடியாட்களை வைத்து கண்ணனை ரத்தம் சொட்ட சொட்ட அடிக்க வைத்துள்ளார். நாளை ஒளிபரப்பாக போகும் இந்த காட்சிகளின் புரொமோ இப்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.