‘மாநகர காவல்’ திரைப்படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார்.
‛வெற்றி மேல் வெற்றி’, ‛பொண்ணு பார்க்க போறேன்’, ஏ.வி.எம்.ன் 150-வது படமான விஜயகாந்த் நடித்து வெளியான ‛மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்.தியாகராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோக்கு எதிரே இருந்த சாலையில் இறந்து கிடந்தார்.
உடனடியாக , அவர் உடலை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
சினிமாவை நம்பி ‘மாநகர காவல்’ என்கிற திரைப்படத்தை எடுத்த இயக்குநர் இறுதியில் இறந்த பின்பு மாநகர காவலர்களால் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.