இந்தியா முழுவதும் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அந்தத் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஜம்மு – காஷ்மீா் 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை முதல்முறையாக ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாத நிலையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.